கரூர் அருகே விநாயகர் சதுர்த்தியன்று சாமிக்கு உடைத்த தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பரவசம் – வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தற்காலிகமாக அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துக் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜை ஒன்றில் கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்ற பொழுது,
சாமிக்கு உடைத்த தேங்காய் விநாயகரின் துதிக்கை உருவத்தில் காட்சியளித்தது பக்தர்களிடம் பரவசத்தை உண்டாக்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.