Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விருதுநகரில் பரபரப்பு: பறக்கும் படை சோதனையில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூலக்கரை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது, நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.2 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகைக்கு உரிய ஆவணங்கள் காட்டப்படாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!