செப்.1-ம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணை நீர், தற்போது திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்துள்ளது. மேலணைக்கு விநாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நீர் முக்கொம்பை வந்தடைந்ததை அறிந்த அப்பகுதி விவசாயிகள், மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். மேலும், விடுமுறை நாள் என்பதால் அணைப் பகுதியில் திரண்ட சிறுவர்கள், நீரில் இறங்கி குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீர்வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
