Skip to content

திருச்சியில் குழாய் உடைப்பு .. நாளை குடிநீர் கட்..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் உந்து குழாய் 22.06.2024-ல் உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளில் நாளை ஒரு நாள் (23.06.2024) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

24.06.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!