தவெக வாசலில் காங்கிரஸ் கட்சியினர் நிற்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியிருந்த நிலையில் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைக்க வேண்டாம்; பதிலடி உறுதியாக கொடுப்போம்; காங். வரலாறு தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
