டில்லியில் நேற்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி ஏன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் கல்வி முறையைக் கரையான் அரிப்பது போலச் சிதைத்து விட்டதாகவும், மாணவர்கள் மீதான அநீதிக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
