அசாம் மாநிலத்தில் கழுத்தில் பெரிய டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உணவுக்காகப் பரிதாபமாக உலா வரும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் வந்தபோது தவறுதலாக டயர் அதன் கழுத்தில் சிக்கியிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்குள், வனத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு டயரை அகற்றி யானையைப் பத்திரமாக மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
