மதுரை, ராமராயர் மண்டபம் சாலையில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் அலறிய பெண்ணை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 90% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அப்பெண்ணின் பெயர் வள்ளி(45) என்பதும் வறுமையின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.
