கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. மருந்தகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
