நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நிலவிய கடும் வெயிலுக்குப் பிறகு, நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழையும், சந்திப்பு பகுதியில் சாரல் மழையும் பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடையநல்லூரில் இடி மின்னலுடன் பெய்த மழையின் போது, வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி காசிராஜ் (42) மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
