திருச்சியில் போதை ஊசி செலுத்தியதில் இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் லாட்ஜில் நண்பர்களுடன் தங்கியிருந்த பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தியபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் சதாம் உசேன், ஹேக் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போதை ஊசி, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
