திருச்சி, பெருவளப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹென்றிதாஸ்(54). இவர் 4 நாட்களுக்கு முன் அப்பகுதி டாஸ்மாக்கில் மது குடித்தபோது, அதே பகுதியை சேர்ந்த செபஸ்தியார் என்பவர் அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் அருகிலிருந்தவர்கள் விலக்கினர் .தொடர்ந்து செபஸ்தியார், ஹென்றிதாஸ் வீட்டுக்கு இரவு சென்று பிரச்னை செய்ததால், ஹென்றிதாஸ் கட்டையால் தலையில் அடித்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்ற செபஸ்தியார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
