இளைஞர்கள் போராட்டத்தின்போது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்க ராகுல் காந்தி சென்றார். கடந்த மாதம் நீட் முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தடியடி மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மீது பெல்லட் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். பெல்லட் குண்டால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரையும் அவர் அழைத்துச் சென்றார்.
