Skip to content
Home » ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

  • by Senthil

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது படிப்படியாக பூதாகரமாக வெடித்தது.

இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவரும் ஜெகன் அரசு குறித்து பகிரங்கரமாக பேசி வந்தார். ஒரு கட்டத்தில் ஹைதராபாத்தில் வசிக்கும் இவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஜாமீனில் வெளியே வந்ததும் ஜெகன் அரசு மீது உச்சநீதிமன்றம் வரை புகார் மனுக்களை தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!