Skip to content

காதல் திருமணம் செய்த வாலிபர் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண்

காதல் திருமணம் செய்த வாலிபர்  2 நாளில் கடத்தல்….கணவனை மீட்க போராடும் கரூர் புதுப்பெண்

======

திருவள்ளூர் மாவட்டத்தில்  ஒரு  காதல் திருமண ஜோடியை பிரிக்க    அரசியல்வாதி, தொழிலபதிர், போலீஸ் உயர் அதிகாரி,  மகேஸ்வரி அக்கா என ஏராளமானோர் தலையிட்டு இன்று அவர்கள்   சட்டத்தின்  பிடியில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பிரச்னையே இன்னும் தீரல.  அதுக்குள்ள  இன்னொன்னு ஆரம்பிச்சுட்டு.   அதே  காதல் திருமணம், தம்பதிய  பிரிக்க கடத்தல் என  வழக்கமான வேலைய  செஞ்சி  இப்போது  இவங்களும் போலீசுல மாட்டப்போறாங்க.

 

சரி வாங்க…… பிரச்னை என்னன்னு பார்ப்போம்…..

காவிரி தாலாட்டும் அழகான ஒரு நகரம் கரூர் மாவட்டம்  மாயனூர் .  இதன் அருகே உள்ள   பொரணி  என்ற கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும்  கரூர் மாவட்டம் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும்  காதலித்து வந்தனர்.

காதல் அரும்பிய இடம்  பள்ளிக்கூடம். இருவரும் ஒரே பள்ளியில் படித்தபோது  மலர்ந்த காதல்.  இவர்கள் காதலுக்கு இப்போது வயது 7.   கணபதி,  பைனான்ஸ்   தொழில் செய்து வருகிறார்.

இவங்க  இருவரின் ஊர்களுக்கும்  இடையே உள்ள தூரம் கொஞ்சம் அதிகம் தான். ஆனால்  செல்போன்  தான்  உலகத்தையே உள்ளங்கையில கொண்டு வந்து கொடுத்துட்டுதே.  எனவே  இவர்கள் காதலுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல.

போன் உரையாடல்கள், அவ்வப்போது சந்திப்பு என  காதல் வளர்ந்தது.  இதில என்ன பிரச்னைன்னா….. அதே பழைய கதை தான்.  இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என  கூறப்படுகிறது. எனவே  காதலன் வீட்டில் எதிர்ப்பு.

காதலித்தோம்,  கட்டுண்டோம்…. இனி  ஓர் உயிராய் வாழ்வோம் என முடிவு செய்த  கணபதியும், சதயவர்த்தினியும் கடந்த திங்கட்கிழமை  கோவைக்கு போனார்கள். வழக்கம் போல  நண்பர்கள் உதவினர். கோவை காந்தி புரத்தில் திருமணம் நடந்தேறியது.  2 நாள் தேனிலவு கொண்டாட்டம் முடிந்து மணமக்களாய்   கோவையில் இருந்து  கரூருக்கு  வந்து கொண்டிருந்தனர்

இந்த தகவல்  கணபதியின் வீட்டாருக்கு தெரியவந்தது.   உறவினர்களுடன்  கார்களில் சென்று  பல்லடம் அருகே  பஸ்சை  வழிமறித்து  காதல் திருமண ஜோடியை கண்டுபிடித்து  வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.  மணமக்களை காரில் ஏற்றி

கரூர் அடுத்த தான்தோன்றிமலைக்கு  கொண்டு  வந்து கணபதியின் உறவினர் வீட்டில் வைத்து இருவரையும் சரமாரியாக தாக்கினர்.   பெண்  அணிந்திருந்த தாலி, மெட்டி ஆகியவற்றை கழற்றி விட்டு,  பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து,. உன் தங்கையை அழைத்து செல்,  இல்லாவிட்டால் தீர்த்து கட்டிவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்து போன அவர் நண்பர்களுடன் சென்று தங்கையை மீட்டு,  கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு  பெண்ணுக்கு  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை பெற்று வந்த புதுப்பெண் சதயவர்த்தினி,  பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவங்களை கண்ணீர்மல்க கூறினார்.  தனது கணவரை கடத்திச் சென்று விட்டனர். அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும்  சதயவர்த்தினி கூறினார்.

சதயவர்த்தினி தன் கணவரை மீட்கும்வரை ஓயப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். போலீசார் இந்த விவகாரத்தில்  என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

error: Content is protected !!