திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் யுவராணி ( 30).திருச்சி புறநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் .
இவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வாசலின் அருகே வெளியே வைத்துவிட்டு கணவர் மணிவண்ணனுடன் மார்க்கெட்டிற்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து நகையை எடுத்து சென்று விட்டனர். இது குறித்து பெண் போலீஸ் யுவராணி, கே. கே. நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.
