Skip to content
Home » வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

வீட்டில் திடீர் தீ விபத்து…. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Senthil

நாகை அடுத்துள்ள புத்துரை சேர்ந்தவர் பெயிண்டர் முருகானந்தம். இவரது மனைவி குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று முருகானந்தம் வர்ணம் பூசும் பணிக்காக நாகை துறைமுகம் சென்றிருந்தார். மேல்மாடி வாடகை வீட்டில் குடியிருக்கும் இவரது வீடு இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. பூட்டி இருந்த வீட்டில் திடீரென மேற்கூரை தீப்பிடித்து எறிந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து கொண்டு தீயை

அணைக்க முயற்சித்தனர். காற்றில் வேகத்திற்கு தீயானது மள, மளவென கொழுந்து விட்டு எறிய தொடங்கியதால், தீயை அணைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து நின்றனர். அதனைத் தொடர்ந்து நாகை தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர் ஆனால் வீடு முழுவதும் கருகி நாசமானது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில் மெத்தை பீரோ பிரிட்ஜ் உள்ளிட்ட தங்க நகைகள் என 10, லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது. மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!