கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்று 1,72,700 பசு மற்றும் இருமையினங்களுக்கு 75 குழுக்கள் மூலம் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 1,48,533 லட்சம் பசுக்களும், 24,167 எருமைகளுக்கும் மொத்தம் 1,72,700 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணிகள் 01.03.2023 முதல் 21.03.2023 வரை மேற்கொள்ளப்படும், அதேபோல் விடுபட்ட கால்நடைகளுக்கு 01.03.2023 முதல் 31.03.2023 வரை தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும்,
தடுப்பூசி பணிக்காக 1,73,000 தோசை கல் தடுப்பூசிகள், கால்நடை பராமத் துறையின் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே கரூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர் தங்களுடைய பசி எருமை எருது மற்றும் கன்றுகளுக்கு எவ்வித விடுபாடும் இன்றி முழுமையாக கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தடுப்பூசி கால்நடைகளுக்கு போடப்படுவதால் அடுத்து ஆறு மாதங்களுக்கு கால்நடைகளை கோமாரி நோய் பாதிக்காமல் காப்பாற்றலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.