நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் வன ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி அருகே மார்லிமந்து அணை காப்புக் காட்டுப் பகுதியிலும், பைக்காரா வனச்சரகம் நடுவட்டம் காப்புக் காட்டுப் பகுதியிலும் இறந்து கிடந்த 2 புலிகளின் உடல்களைக் கைப்பற்றிய வனத்துறையினர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிமுறைகளின்படி உடற்கூறாய்வு நடத்தித் தீ வைத்து எரித்தனர்.
