Skip to content
Home » நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய கமல்….

நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய கமல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்திக்கு புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடம் நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக முழுமைபெறாமல் இருக்கிறது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார்.

உதயநிதி நன்கொடை
அவரைத் தொடர்ந்து, இன்று புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் கமல் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் கமலிடமிருந்து காசோலையை பெற்றுக்கொண்டனர்.
நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு மறைந்த நடிகரும் தேமுதிக முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பெயரைச் சூட்டவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் இருந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சங்கக் கட்டிடத்தை விரைவில் கட்டிமுடித்து திறப்பு விழாவை நடத்த நடிகர் சங்க நிர்வாகிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!