Skip to content
Home » 1000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

1000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் தஞ்சாவூரில் இருந்து கன்னியாகுமரிக்கு 1250 டன் அரிசி பொது வினியோகத் திட்டத்திற்காக 21 வேகங்களில், கும்பகோணத்தில் இருந்து சேலம் மற்றும் நாமக்கல்லுக்கு தலா 1000 டன் நெல் தலா 21 வேகங்களில் அரவைக்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!