Skip to content
Home » 12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன்சென்றுவிட்டு நேற்று இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பினார். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியபோது தான் கொண்டு வந்திருந்த கைப்பையை எடுக்காமல் ரயிலிலேயே வைத்துவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளார். ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த ரயில் மயிலாடுதுறையை நோக்கி சென்று கொண்டிருந்தது உடனடியாக மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதிர்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆய்வாளர் சுதிர்குமார் மயிலாடுதுறைக்கு வந்த ரயிலில் ஏறி அந்த கைப்பையை மீட்டார். இதனைத் தொடர்ந்து பையை தவறவிட்ட கமலா தனது குடும்பத்தினருடன் வேறொரு ரயில் மூலம் மயிலாடுதுறை வந்தார். அவரிடம் கமலா தவறவிட்ட பொருட்களான வளையல் மற்றும் செயின் ஆகிய 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3600 ரொக்க பணம் அடங்கிய கைப்பையை ஆய்வாளர் சுதிர்குமார் ஒப்படைத்தார். பொருட்களை
பாதுகாப்பாக எடுத்துச் செல்ல அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!