தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, பொது வினியோக திட்டத்திற்காக தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..
- by Authour
