தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது தாத்தா, பாட்டி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவன் பின்னர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். ஆசியாவில் பொதுமக்களிடம் அதிக அளவில் துப்பாக்கிகள் உள்ள நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும்.
