Skip to content
Home » 13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

13 வயது சிறுமி பலாத்காரம்.. கடலூர் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

கடலூர் மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (31). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜவுளிக்கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது அதே கடையில் பணியாற்றிய 13 வயது சிறுமியை கடந்த 02.04.2022 ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை காணவில்லை என்று, அவரது தந்தை கொடுத்த புகாரில், ஜெயங்கொண்டம் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்து, செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று நீதிபதி செல்வம், குற்றத்தை உறுதி செய்து, செல்வமணிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ள. இதன் பின்னர் செல்வமணி போலீசார் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!