அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக அசாமை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை அசாம் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இது குறித்து முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு இது பேரழிவுக்கான தருணமாகும். அசாமில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதுபோன்ற நபர்களுக்கு முடிவு கட்டுவது உறுதி,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

