நேபாள நாட்டைச் சேர்ந்த முனி சவுத் மற்றும் அவரது மகன் கோகுல் சவுத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து கஞ்சா விதைகளை ரகசியமாகக் கடத்தி வந்து, உதகையில் தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே பக்குவமாக வளர்த்து, அறுவடை செய்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
முனி சவுத்தின் வீட்டின் பின்புறம் வளர்க்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட 6 பெரிய கஞ்சா செடிகளை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
