தஞ்சை கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). கடந்த நவம்பர் 26ம் தேதி இரவு இந்திராணி, அவரது மகள்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் 3 மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி இந்திராணி மற்றும் அவரது மகள்கள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். கொள்ளையர்கள் டவுசர் அணிந்து இருந்தனர். இதுகுறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மனோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சரவணன் (30), தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு அன்னை சிவகாமி நகர் குறுக்கு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் கருப்பு சதீஷ் (எ) சதீஷ்(33) ஆகிய இருவரையும் போலீசார் கைது சிறையில் அடைத்தனர். இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.