கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக இருந்து வந்தது. அதன் வாய் பகுதியில் காயத்துடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர் அதன் அடிப்படையில் வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது இதே போல் வனத்துறையினருக்கு உதவியாக யானையைப் பிடித்து மயக்கம் ஊசி செலுத்த முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு
யானைகள் முகாமிலிருந்து விஜய் மற்றும் வசீம் என்ற இருக்கும் யானைகளும் வரவழைக்கப்பட்டன பின்னர் அவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய பாகுபலி சென்று மறைந்தது இதனால் யானை பிடித்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் யானைக்கு வாயில் ஏற்பட்ட காயம் தானாக சரியாகிவிடும் என்று கூறி வனத்துறையினர் மற்றும் வன மருத்துவ குழுவினர் யானையை பிடிக்கும் முயற்சியை கைவிட்டனர். இருப்பினும் கடந்த இரண்டு மாத காலமாக அடர்ந்த வனப் பகுதிக்குள் சுற்றி திரிந்து வந்த பாகுபலி காட்டு யானை நேற்று இரவு கல்லார் ரயில்வே கேட் அருகே சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.