Skip to content

படிப்பு சரியா வரவில்லையென +2 மாணவன் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை..

கரூர், அரவக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12 வகுப்பு படிக்கும் மாணவன், படிப்பு சரியாக வரவில்லை என சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை.

கரூர் மாவட்டம், ஈசநத்தம் கஸ்பா தெருவைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் மகன் யுவன் பிரியன் (17). இவர் அரவக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தாய் ராதாவுடன் அரவக்குறிச்சி, காமராஜ் நகரில் தங்கி படித்து வருகிறார். மாணவன் தினசரி பள்ளி முடிந்த பிறகு சீத்தப்பட்டி காலனியில் செயல்படும் டியூசன் சென்டரில் டியூசன் முடித்துவிட்டு, இரவு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல பள்ளி முடித்து, டியூஷன் சென்டர் போய்விட்டு 8 மணி அளவில் சீத்தப்பட்டிகாலனி பேருந்து நிறுத்தத்தில் வந்து சாணி பவுடர் (விஷம்) சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் மாணவன் வீடு திரும்பியவுடன் தனக்கு Bio Maths பாடம் சரியாக வராததால் தான் சாணி பவுடரை சாப்பிட்டதாக தாய் ராதாவிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா உடனடியாக தனது மகனை அழைத்துக் கொண்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்தது தொடர்பாக, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!