Skip to content
Home » கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

கோபத்தில் +2 மாணவனுக்கு பளார் விட்ட தலைமை ஆசிரியர்…. காதுகேட்காமல் ஜிஎச்-ல் அனுமதி…

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள இராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ரவிச்சந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்த நிலையில், நேற்று மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. அந்த விழாவில் மாணவர்கள் ஆர்வம் மிகுதியால் சைக்கிளில் இருந்த பெல்லை அடித்துள்ளனர். அப்போது, சைக்கிள் பெல்லை அடித்த பொன்னிவளவன் என்ற பிளஸ் 2 மாணவனை தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலது பக்க காது கேட்கவில்லை என்று கூறி பொன்னிவளவன் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில்   சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறி  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!