Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…..

  • by Senthil

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (25-ம் தேதி) முதல் 28-ம் தேதி வரை4 நாட்களுக்கு  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியிருந்தது.  இதனையொட்டி சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் அதிகாலை 3 மணியளவில் லேசான மழை பெய்தது.

rain

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!