பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் அமைப்புகளை சேர்ந்த 17 பாகிஸ்தானியர்கள், 6 இந்தியர்கள் உட்பட 23 பேரை மத்திய அரசு உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ராணுவ முகாம் தாக்குதல்கள், ட்ரோன் மூலம் ஆயுத கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதில் லஷ்கர் நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகள் மூவரும் அடங்குவர் என உள்துறை தெரிவித்துள்ளது.
