Skip to content
Home » 3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள எதுமலை செட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (52). இவர் நேற்று  வீட்டை பூட்டிவிட்டு முசிறி அருகே உள்ள திருத்தலையூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில்  3 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேசனில் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் செந்தில்வேலன் (30). இவர்  நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். அவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த  12 பவுன் நகைகளை  திருடிச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த செந்தில்வேலன் போலீஸ் ஸ்டேசனில்  புகார் அளித்தார்.

மேலும் சிறுகனூர் அருகே உள்ள வாழையூர் கோனார் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன். இவரின்  வீட்டில் 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ. 10 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரும் சிறுகனூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!