Skip to content
Home » 3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

3 லட்சம் மதிப்புள்ள நகையை கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்த நபர்…பாராட்டு..

தஞ்சாவூர் சிராஜ்பூர், நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ரெப்கோ வங்கியில் அடகு வைத்த 3 லட்சம் மதிப்புடைய 6 சவரன் நகையை திருப்பிவிட்டு செல்லும் வழியில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கும் போது தவறவிட்டுவிட்டார். இந்நிலையில் அந்த நகையை மகர்னோன்பு சாவடியைச் சேர்ந்த செய்யது காதர் என்பவர் கண்டெடுத்து அதனை தஞ்சை கீழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை அடுத்து கிழக்கு காவல் நிலைய போலிசார் நகையை தொலைத்த பிரபாகரனை அழைத்து நகையை ஒப்படைத்தனர். மேலும் நகையை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த செய்யது காதரின் நேர்மையை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!