Skip to content
Home » 3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை தெற்குமாரட் வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக் ராஜா(22). இவர் புத்தாண்டு அன்று காலை நத்தம் பைபாஸ் சாலையில் நண்பருடைய இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சாலையில் தவறி விழுந்தார். இதனால் கார்த்திக் ராஜாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானமாக பெறுவது குறித்து இளைஞரின் பெற்றோரிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் கார்த்திக் ராஜா உடல் உறுப்புகளைத் தானமாக தர அவரது தந்தை ஜெய்சங்கர் ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து கார்த்திக் ராஜாவின் இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது. சிறுநீரகங்கள் மதுரை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் கார்த்திக்ராஜா உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அஞ்சலி செலுத்தினார். மூளைச்சாவு அடைந்த நிலையில், தனது மகனின் உறுப்புகளை அவரது தந்தை தானமாக கொடுத்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!