மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழையின் அளவு குறைந்த போதிலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீர்
ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 118.45அடி எட்டியது இதனை தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 308 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி
மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 349 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது,
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்படும் எனவும் தற்போது விவசாயிகள் பயன்பாட்டிற்காக உபரி நீர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது ஆற்றின் கரையோர பகுதி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அணையின் தண்ணீர் அதிகமாக உள்ளதால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.