Skip to content
Home » திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு 378 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

இந்நிகழ்வில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, வருவாய் கோட்டாட்சியர் எம்.வேலுமணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.செல்வம், வட்டாட்சியர்

குணசேகரன், மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம்கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை உயர் அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!