Skip to content
Home » திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

திருச்சி பாமக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது…

  • by Senthil

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை  எதிரே நேற்று இரவு  பாமக பிரமுகர் பிரபு  என்கிற பிரபாகரன் என்பவர்   கொடூரமாக கொலை  செய்யப்பட்டார்.    தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இன்று பிரபு ஆஜராக இருந்த நிலையில் அவர்  கொலை செய்யப்பட்டது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக   அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து  கீழ்க்கண்ட 4 பேரை கைது செய்தனர். 1, லட்சுமணன்(23),  மேல அம்பிகாபுரம், அரியமங்கலம், 2. ரியாஸ் ராஜேஷ்(24),  அம்மாக்குளம், அரியமங்கலம், 3. ராஜேஷ் பைலட்(28) மகாதேவபுரம், கச்சமங்கலம், தஞ்சை மாவட்டம்,  4. பஷீர்(29), அரியமங்கலம், இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பு என்கிற ஹரிகிருஷ்ணனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!