Skip to content
Home » சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

மிக்ஜம் புயல் காரணமாக  சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்  பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.  இன்னும்  அங்கு நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அடுத்த வாரம் அரையாண்டு தேர்வு நடைபெறும். அந்த தேதிகளில் மேற்கண்ட 4 மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு நடைபெறாது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் வெள்ளம் வடிந்து நிலைமை சீரானவுடன் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் வினாத்தாள் தயாரித்து அரையாண்டு தேர்வு நடத்திக்கொள்ளலாம் என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!