Skip to content
Home » கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர் சந்திரமோகன் நேற்று சென்ற போது கீழே கிடந்த பையில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 1/2 பவுன் தங்க நெக்லஸை தவறவிட்ட அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனை அடுத்து

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ் கான் அப்துல்லா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர் சந்திரமோகன் ஆகியோர்களின் மெச்சத் தகுந்த பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!