Skip to content
Home » வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

வேளாண் வளர்ச்சி திட்டம்…400 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்…

  • by Senthil

திருவையாறு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடுவெளி ஊராட்சியில் தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. கடுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடுவெளி, மேலபுனவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 400 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 நெட்டை தென்னங்கன்றுகள் வீதம் இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தென்னங்கன்றுகளை திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அரசாபகரன் விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயா, கடுவெளி ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா , கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் உட்பட கலந்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடுவெளி ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா , ஊராட்சி செயலர் ரவி,வேளாண் உதவி அலுவலர்கள் வெங்கடேசன், ஐஸ்வர்யா மற்றும் வேளாண் அலுவலர் சினேகா ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!