Skip to content
Home » சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

  • by Senthil

உத்தராகண்ட் மாநிலம்  சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி  பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள்  சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.  65 மீ தூரத்தில் இவர்கள் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17-வது நாளாக இன்றும் (செவ்வாய்) மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் திருச்செங்கோடு ரிக்  பொறியாளர்கள்  ஈடுபட்டனர். அந்த பணி நடந்தபோது  அந்த எந்திரம் உடைந்து உள்ளே சிக்கிக்கொண்டது. அதைத்தொடர்ந்து ராணுவத்தினரும், பேரிடர் மீட்பு படையினர்,  சென்னை இன்ஜினீயர்ஸ் என்ற  மீட்புபடையினர்  மீட்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டில்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறியஅளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன்காரணமாக ‘எலி வளை’ தொழிலா ளர்கள் என்று  இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இன்று காலை 11 மணி அளவில்  மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை வெளியிட்டனர். அதாவது இன்னும் சில மணி நேரத்தில்  சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டு விடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து 41 தொழிலாளர்களின் குடும்பத்தினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.  41 தொழிலாளர்களுக்கும்  உடனடியாக உடை மாற்றுவதற்கு தேவையான உடைகளை கொண்டு வரும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படி அவர்கள்  மாற்று உடைகளுடன் அங்கு வந்து   ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  சிலர்  அருகில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் அந்த இடத்திலேயே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர்,  ஆம்புலன்ஸ்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.அருகில் உள்ள நகரங்களில் உள்ள மருத்துவமனைகளும் உஷார்படுத்தப்பட்டிருந்தனர்.

சரியாக மதியம் 1.30 மணிக்கு ஒரு ஆம்புலன்ஸ் சுரங்கத்திற்குள் அனுப்பப்பட்டது. 1.40 மணிக்கு பேரிடர் மீட்பு  படையினர் 50க்கும் மேற்பட்டவர்களும்  சுரங்கத்திற்குள்  அனுப்பப்பட்டனர். ஒவ்வொருவராக வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதியம் 2.15 மணிக்கு 10 பேர் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்களை மீட்கும்பணி நடப்பதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!