தமிழகம் முழுவதும் 46 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். பாளையங்கோட்டை உதவி ஆணையராக இருந்த சரோஜா, நெல்லை மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றபட்டார். ஆவடி காவல் ஆணையரக குற்ற ஆவண காப்பகத்தின் உதவி ஆணையர் முத்துராஜா, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியாக மாற்றபட்டார். அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக இருந்த தமிழ்வாணன் பாணன் பொன்னேரி காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.
