Skip to content
Home » ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி

ஊட்டி…மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலி

  • by Senthil

உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இன்று காலை வழக்கம் போல பணி நடந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது  திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு படையினர், அக்கம் பக்கம் உள்ள மக்கள் ஓடிவந்து மீட்பு பணி்யில் ஈடுபட்டனர்.  மீட்கப்பட்டவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் முத்துலட்சுமி, உமா, சகிலா உள்ளிட்ட  5 பெண்கள் இறந்தனர்.  தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!