Skip to content
Home » 5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன், மருமகள் அரசி(38). பேரன் ஜோவின்(12), பேத்தி செர்லின்(15) ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு சின்னப்பன் தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு, தூங்கச் சென்றார்.

அரிவாள் வெட்டால் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரிவாள் வெட்டால் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை நேரம் ஊரில் எந்த நடமாட்டமும் இல்லாத நேரம், மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டிற்குள் புகுந்தனர். அத்துடன் வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களின் சத்தம் கேட்டு எழுந்த சின்னப்பன், சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து, அவரை அந்த மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த மற்ற குடும்பத்தினரையும் அந்த மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவர்கள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

மேலும், அவர்கள் வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அந்த மர்மக் கும்பல் தப்பிச் சென்றது. சின்னப்பன் குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு சின்னப்பன் உள்பட பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்த்சியடைந்தனர்.

இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து படுகாயமடைந்தவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரும் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கல்லூரணி கிராமத்தினர் இன்று காலை பள்ளித்தம்மம் விளக்கு ரோட்டில் மறியல் நடந்தினர்.

தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட எஸ்பி. அரவிந்த நேரில் சென்று மறியல் செய்த மக்களிடம் பேசி மூன்று நாட்களில் குற்றவாளிகளைப் பிடிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!