இன்று 29.06.2026 காலை 7 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு உடல் சிதறி இறந்துள்ளார். இறந்தவரின் உடலை கைப்பற்றி செல்வி.கவிதா உதவி ஆய்வாளர் ரயில்வே காவல் நிலையம் திருச்சிராப்பள்ளி அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி விசாரித்து வருகிறார். இறந்தவர் கருப்பு வெள்ளை சட்டை போட்ட முழுக்கை சட்டை அணிந்துள்ளார். மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 94434 72524 மற்றும் 90805 63321.
50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி…அடையாளம் காண உதவுங்கள்
