Skip to content

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்

மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடலின் நடுவே படகு நின்றபோது, வந்த ராட்சத அலையின் வேகத்தைத் தாங்க முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

தகவல் அறிந்து வந்த லிபிய கடலோரக் காவல் படையினர் மற்றும் சர்வதேச மீட்புக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு 40 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வாழ்க்கை தேடி ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் லிபியா வழியாக ஐரோப்பாவிற்குச் செல்ல முயல்கின்றனர்.

மனிதக் கடத்தல்காரர்கள் அளவுக்கு அதிகமான நபர்களைச் சிறிய படகுகளில் ஏற்றுவதே இது போன்ற விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாகிறது.

அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மனிதக் கடத்தலைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஐநா (UN) போன்ற அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

error: Content is protected !!