Skip to content
Home » காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது.

அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள்,சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதல் அந்த காப்பகத்தில் இருந்த கை குழந்தைகள் எட்டு பேருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காப்பக நிர்வாகிகள் உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகளை அனுமதித்தனர். 8 குழந்தைகளுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கைக்குழந்தைகள் என்பதால் குழந்தைகள் வார்டில் அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காப்பகத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரனமாக மூச்சு தினறல் ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்கு வந்த பின்னர் அனைத்து குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளை விட காப்பகத்தில் பராமரிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் ஊட்டசத்தும் குறைவாக இருப்பதே இது போல் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட காரணமாக அமைகிறது என்ற
அரசு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதே போல கடந்த மாதம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!