திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஆக.23) ஒரே நாளில் மொத்தம் 81,553 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4.17 கோடி வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 34 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளதுடன், இலவச தரிசனத்திற்கான வரிசை சிலாதோரணம் வரை நீண்டுள்ளதால் டோக்கன் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
